உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் கர்ப்பிணியை தாக்கிய கும்பல்!

Published On 2023-03-24 15:25 IST   |   Update On 2023-03-24 15:25:00 IST
  • திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் கர்ப்பிணியை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அபிராமிகு ப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவருக்கும் தேனி மாவட்டம் தேவதா னப்பட்டியை சேர்ந்த நாகவேணிஎன்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

7 மாத கர்ப்பிணியாக இருந்த நாகவேணிக்கு நேற்று சிலுவத்தூர் சாலை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் திடீரென நாகவேணியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது கணவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதனால் மண்டபத்தில் பரபரப்பான சூழல் உருவானது. படுகாய மடைந்த 2 பேரும் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டுள்ளனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News