உள்ளூர் செய்திகள்

தீபாவளி பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு கொழுந்து விட்டு எரியும் காட்சி.

பண்ருட்டியில் பட்டாசு வெடித்து கூரை வீடு எரிந்து நாசம்

Published On 2022-10-25 06:47 GMT   |   Update On 2022-10-25 06:47 GMT
  • சுந்தர்ராஜன் என்பவரின் வீடு பட்டாசு வெடித்து தீப்பிடித்து வீடு முழுவதும் சேதம் அடைந்தது.
  • அக்கம் பக்கம் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த சின்னப்பேட்டை பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 38) என்பவரின் வீடு பட்டாசு வெடித்து தீப்பிடித்து வீடு முழுவதும் சேதம் அடைந்தது. இது பற்றி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பண்ருட்டிதீயணைப்பு துறை அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அக்கம் பக்கம் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News