உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி.

தாரமங்கலம் அருகே தேங்காய் நார் குடோனில் தீ விபத்து

Published On 2023-04-12 09:08 GMT   |   Update On 2023-04-12 09:08 GMT
  • கோணகப்பாடி கிராமம் செட்டியார் காடு பகுதியை சேர்ந்த செந்தில், இவர் சொந்தமாக நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
  • நேற்று இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கோணகப்பாடி கிராமம் செட்டியார் காடு பகுதியை சேர்ந்த செந்தில், இவர் சொந்தமாக நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மள மள என பரவி அங்கிருந்த தேங்காய் நார் கழிவுகள் பற்றி எரிந்தது.

இதுபற்றி ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது பற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News