உள்ளூர் செய்திகள்

விளம்பர பலகை வைத்த லாட்ஜ்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2022-09-04 09:25 GMT   |   Update On 2022-09-04 09:25 GMT
  • பலகைகளை அகற்ற முடியாமல் மாநகராட்சி தடுமாறி வருகின்றனர்.
  • மீண்டும் இரவோடு, இரவாக விளம்பர பலகைகளை வைத்து விடுகின்றனர்.

கோவை -

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு அறிவுறத்தல்களை மீறி கோவை நகர் பகுதிகளில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் அடிக்கடி வைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இதனை பார்த்து அகற்றினாலும், மீண்டும் இரவோடு, இரவாக விளம்பர பலகைகளை வைத்து விடுகின்றனர்.

இதுபேன்ற விளம்பர பலகைளை அகற்றி னாலும், மீண்டும் வைக்காமல் இருக்க இரும்பு கம்பிகளையும் வெட்டி அகற்ற நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டிருந்தார்.ஆனால் மாநகராட்சி யால் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனம் கோவையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் தங்களது விளம்பர பலகைகளை வைத்து வருகிறது.

இந்த பலகைகளை அகற்ற முடியாமல் மாநகராட்சி தடுமாறி வருகின்றனர்.

இந்த நிலையில் டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு அருகேயே என்.எச்.ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜின் மாடியில் இருபுறங்க ளிலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், கோர்ட்டு அறிவுறு த்தல்களை மீறி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த தகவல் மாநகராட்சி கமிஷனர்(பொ)ஷர்மிளா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் விளம்பர பலகைகளை அகற்றவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையில் சென்ற அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு செய்து, அந்த லாட்ஜூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். விளம்பர பலகை மற்றும் இரும்பு கம்பிகளை அகற்றாவிட்டால், லாட்ஜூக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags:    

Similar News