உள்ளூர் செய்திகள்

கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

பேராவூரணியில், கலந்துரையாடல் நிகழ்ச்சி

Published On 2023-08-30 10:05 GMT   |   Update On 2023-08-30 10:05 GMT
  • தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.
  • வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உண்டாகிறது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராணி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் அருண் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் குறித்து பேசியதாவது,

இந்த சிவப்பு கூன்வண்டு தாக்குதல் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை அதிக அளவில் தென்னையை தாக்குகின்றன. இயந்திரங்கள் மூலம் உலவும் மேற்கொள்ளும் பொழுது காயங்கள் ஏற்படுவதால் அதிக அளவில் குருத்துகளை தாக்குகின்றன.

இவ்வாறு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.

இதனால் மரங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. இந்தப் பாதிப்பு வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உள்ளாகிறது.

இதனை கட்டுப்படுத்தும் மாதங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகும்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்துக்கு என்ற அளவில் பயன்படுத்தலாம் என்றார்.

மேலும் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் எனவும் கூறினார்.

தரமான தென்னங்கன்றுகள் தேர்வு செய்து நடுவது குறித்தும், நீர் மேலாண்மையில் சொட்டுநீர் பாசன முறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த உரம் வேளாண்மை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், பயிர் அறுவடை களப்பணியா ளர்கள் மற்றும் உழவர் நண்பர்கள், பண்ணை தகவல் ஆலோசனை குழுக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பொன் செல்வி, நெடுஞ்செழியன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News