உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அருகே கடற்கரையில் பள்ளி தலைமை ஆசிரியர் சடலம்

Published On 2023-07-07 06:30 GMT   |   Update On 2023-07-07 06:30 GMT
  • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கூவத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நகரியம் பகுதியில் உள்ள கடற்கரையில் பழனியப்பன் பிணமாக கிடந்தார். அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமை ஆசிரியர் பழனியப்பன் கூவத்தூரில் இருந்து கல்பாக்கம் கடற்கரைக்கு எதற்காக வந்தார்? அவர் கடலில் இறங்கியபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந் தாரா? அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News