உள்ளூர் செய்திகள்

பீளமேடு அருகே கல்லூரி மாணவி திடீர் தற்கொலை

Published On 2023-03-20 09:31 GMT   |   Update On 2023-03-20 09:31 GMT
  • அபிராமி கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கோவை,

கோவை பீளமேடு அருகே உள்ள குரும்பபாளையம் கென்னடி வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் குறித்து அபிராமி தனது பெற்றோரிடம் கூறினார். மேலும் அவர் உனடியாக தனக்கும் அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறினார்.

அதற்கு மாணவியின் பெற்றோர் தற்போது படித்து வருவதால், படிப்பு முடிந்ததும் முடிவு செய்து திருமணம் செய்து வைப்பதாக அறிவுரை கூறினார். உடனடியாக பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் அபிராமி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் அபிராமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அபிராமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News