உள்ளூர் செய்திகள்

மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.

திடீரென தீ பிடித்து எரிந்த கார்

Published On 2022-12-19 15:29 IST   |   Update On 2022-12-19 15:29:00 IST
  • ரேடியேட்டரில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.
  • காரை ஓரமாக நிறுத்தி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூர் யஷ்வந்த்புரா பகுதியை சேர்ந்தவர் கிரீஷ். இவர், ஓசூர் பகுதியை சேர்ந்த நண்பர் மஞ்சுநாத் என்பவரின் காரை அவரிடம் ஒப்படைப்பதற்காக நேற்று ஓசூர் நோக்கி காரை ஓட்டி வந்தார்.

வழியில் தமிழக எல்லைக்கு மிக அருகில் உள்ள அத்திப் பள்ளி மேம்பாலத்தின் மீது கார் வந்தபோது ரேடியேட்டரில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிரீஷ், சமயோசிதமாக காரை ஓரமாக நிறுத்தி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

சிறிது நேரத்தில், தீ கார் முழுவதும் மள,மள என்று பரவியது.இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆன போதிலும் கார் கருகி முற்றிலும் சேதமடைந்தது.

இது குறித்து கிரீஷ் அத்திப் பள்ளி போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News