உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஆண்டிபட்டியில் மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2023-07-08 05:35 GMT   |   Update On 2023-07-08 05:35 GMT
  • மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார்.
  • போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

நேற்று மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

சிறுமியின் தந்தை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News