உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வாலிபர்பலி

Published On 2023-01-14 14:49 IST   |   Update On 2023-01-14 14:49:00 IST
  • 35 வயது மதிக்கத்தக்க ஆண் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
  • சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்

கடலூர்:

திட்டக்குடிக்கு அருகே இன்று அதிகாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் இந்தியன் வங்கி எதிர்புறம் 35 வயது மதிக்கத்தக்க ஆண் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் தெரியவில்லை. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார் .இது குறித்து வழக்கு பதிவு செய்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News