மோட்டார் சைக்கிள் வாங்க சென்ற வாலிபர், பெண் அரசு பஸ் மோதி பலி
- ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார்.
- சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வினீத்குமார். இவர் இன்று மதியம் இவருடைய சித்தி கற்பகத்துடன் அதே பகுதி விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார். அப்போது ஷோரூமில் மோட்டார் சைக்கிளை எடுத்து சாலையில் நிறுத்தியபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர்கள் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வினீத்குமாரின் சித்தி கற்பகம் உயிரிழந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து விபத்தில் படுகாயம் அடைந்த வினீத்குமாரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.