உள்ளூர் செய்திகள்
குன்னூா் அருகே பள்ளி மைதானத்துக்குள் புகுந்த கரடி
- பள்ளி மைதானத்துக்குள் கரடி புகுந்தது. அங்கு சிறிது நேரம் உலவியது.
- பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் இருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் குடிநீா்த் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருவது வாடிக்கையாக வருகிறது.
இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான பள்ளி மைதானத்துக்குள் கரடி புகுந்தது. அங்கு சிறிது நேரம் உலவியது.
பள்ளியில் இருந்த காவலாளிகள் சப்தம் எழுப்பியதையடுத்து, கரடி வனப் பகுதிக்குள் சென்றது.
பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் இருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
குடியிருப்புப் பகுதிகளில் உலவி வரும் வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.