பரமத்திவேலூர் அருகே பேக்கரி தொழிலாளி திடீர் சாவு
- பரமத்திவேலூரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார்.
- முருகனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரமத்திவேலூர்:
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 22). இவரது பெற்றோர் இறந்து விட்டதால், முருகன் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், முருகன் கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. நேற்று முன் தினம் வழக்கம் போல் பேக்கரியில் வேலை பார்த்து விட்டு, இரவு தான் தங்கி இருந்த ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருடன் தங்கியிருந்தவர்கள், முருகனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முருகன் உயிரி ழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.