உள்ளூர் செய்திகள்

 விவசாயி ஒருவருடைய தோட்டத்தில் 15 அடி நீள மலை பாம்பை வனத்துறையினர் பிடித்த காட்சி.

ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2022-11-17 09:12 GMT   |   Update On 2022-11-17 09:12 GMT
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
  • 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. அவர் நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ராசிபுரம் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனர். பிறகு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி யான காப்பு காட்டில் உயிருடன் விட்டனர்.

Tags:    

Similar News