உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல் அருகே மரத்தில் வேன் மோதி 9 பேர் படுகாயம்

Published On 2023-07-29 05:39 GMT   |   Update On 2023-07-29 05:39 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
  • விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்ப த்தை சேர்ந்தவர்கள் என்ப தும், இவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இந்த விபத்து நடந்தது எனவும் தெரியவந்தது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் இன்று காலை 4 மணியளவில் சாலையோரம் இருந்த மரத்தில் வேன் மோதி விபத்தில் சிக்கியது. இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அவர்கள் திண்டுக்கல் காந்திபுரம் நத்தப்பட்டியை சேர்ந்த நாகராஜ்(32), பாலாஜி(35), மணிவேல் மனைவி நிலா(30), அவர்களது மகன் பூபதி(13), பூஜா(13), பாலையா(44), அவரது மகள் ஹாசினி(9), பழனி ச்சாமி மனைவி பால ம்மாள்(44) என தெரிய வந்தது.

விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்ப த்தை சேர்ந்தவர்கள் என்ப தும், இவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இந்த விபத்து நடந்தது எனவும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News