உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் 84 காலி பணியிடங்கள்

Published On 2023-03-08 10:05 GMT   |   Update On 2023-03-08 10:05 GMT
  • அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
  • இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 84 பதவிகள் நிரப்பப்படுகிறது.

இதில் டாக்டர்கள்- 28, பல்நோக்கு சுகாதார பணியா ளர்கள்- 28, உதவியாளர்கள்-28 பதவிடங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள் (10-ந்தேதி) அன்று மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

டாக்டர்கள் பதவிக்கு கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ், அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ படிப்பு படித்திருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்று இருக்க வேண்டும். உதவியாளர்கள் பதவிக்கு 8-ம் வகுப்பு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் படிவங்கள் நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்சே லம் மாவட்டம்-636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tags:    

Similar News