உள்ளூர் செய்திகள்
ஓசூரில் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
- அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- வருகிற 18-ந் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயத் தேர்திருவிழா வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவினையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் வருகிற 18-ந் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.