உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தேசியக்கொடியினை ஏற்றினார்.

75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா

Published On 2022-08-15 08:51 GMT   |   Update On 2022-08-15 08:51 GMT
  • நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
  • ரூ.1.97 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட ஆட்சிய அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகம் சார்பாக சுதந்திர தின விழா உற்சகமாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் , போலீஸ் சூப்பிரண்டு. சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டார்கள்.

பின்னர் அணிவ குப்பினை சிறப்பாக நடத்தி யதற்காக 14 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.

மேலும் சிறப்பாக பணி யாற்றிய 40 காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 103 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவில் தலா ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கான பரிசு அட்டைகளையும், கலெக்டர் வழங்கினார்.

விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.25,000 க்கான திருமண நிதியுதவி காசோலை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் முதல்- அமைச்சர் உழவர் பாது காப்புத்திட்டத்தின் கீழ் மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.7,80,000 க்கான நலத்திட்ட உதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,82,500 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5,52,294 க்கான கடனுதவி காசோலை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.3,41,915 மதிப்பிலான இலவச தையல் எந்திரம் மற்றும் சலவை பெட்டிகள், வேளாண் பொறியியல்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.13,63,920 மதிப்பிலான வேளாண் எந்திரங்களையும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.18,191 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டதுறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்திற்கான வங்கிக்கடனுதவி காசோலைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சத்திற்கான கடனுதவி காசோலைகளையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு ரூ.79 லட்சத்திற்கான கடனுதவி காசோலைகளையும், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 146 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே, 97 லட்சத்து, 63 ஆயிரத்து, 820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வழங்கினார்.

விழாவில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள், ரெட்டிப்பட்டி பாரதி கல்வி நிறுவன மாணவ, மாணவிகள், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், பரமத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஏ.கே.சமுத்திரம் ஞானோதயா சி.பி.எஸ்.சி பள்ளி மாணவ, மாணவியர்கள், வேலகவுண்டம்பட்டி கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பாச்சல் பாவை கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 708 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவில் தலா ரூ.300 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கான பரிசு அட்டைகளையும், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு வகையான வரைபடங்கள் அடங்கிய வரைபட (அட்லஸ்) புத்தகங்களை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வழங்கினார்.

Tags:    

Similar News