உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்கள்.

சுரண்டையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 7 பேர் கைது

Published On 2023-08-11 09:17 GMT   |   Update On 2023-08-11 09:17 GMT
  • சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த7 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் அளவிலான கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சுரண்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 7 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் சுரண்டை சிவ குருநாத புரத்தை சேர்ந்த காசிராஜன் (வயது 26), ஜோசப் (27), ராம்குமார் (23), வெனிஷ் (22), மதன் (22), மைக்கேல் பவின் (24) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் அளவிலான கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 7 பேரையும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Tags:    

Similar News