உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பெரியகுளத்தில் வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 7 பேர் கைது

Published On 2023-04-01 11:28 IST   |   Update On 2023-04-01 11:28:00 IST
  • கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர்.
  • மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேல்மங்க லத்தை சேர்ந்தவர் வெற்றி வேல். இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனைத் தொடர்ந்து அவர் வடுகபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து வந்த வாலிபர்களிடம் விசாரித்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர். இந்த தாக்கு தலில்ஜெகதீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

ஜெகதீஸ்வரன் தேனி அரசு ஆஸ்பத்திரியிலும், முத்துக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

இதில் 5 பேர் திருச்சியை சேர்ந்த ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதனால் மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags:    

Similar News