உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

Published On 2023-06-10 13:36 IST   |   Update On 2023-06-10 13:36:00 IST
  • 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அனல்மின் நிலைய 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News