உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது

Published On 2023-09-14 07:09 GMT   |   Update On 2023-09-14 07:09 GMT
  • நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
  • மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

நத்தம்:

நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு தாலுகா செயலாளர் வெள்ளை ச்சாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விலை வாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்ட ங்களை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

இதில் தாலுகா துணை செயலாளர் தவநூதன், தாலுகா குழு உறுப்பினர்கள் பொன்னு ச்சாமி, பழனியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News