உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்

தேனியில் 53 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியில் கடன் உதவிகள்

Published On 2022-06-09 05:31 GMT   |   Update On 2022-06-09 05:31 GMT
  • தேனியில் அனைத்து வங்கிகள் சார்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
  • 53 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

தேனி :

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து வங்கிகள் சார்பில் நடத்தப்பட்ட கடன் உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற கடனுதவிகள் வழங்கும் விழாவின் மூலம் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு 13 பயனாளிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும்,

பல்வேறு தொழில்கள் தொடங்கிட 21 பயனாளிகளுக்கு ரூ.3.90 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், தனிநபர் கடனுதவியாக 19 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி கடனுதவிகளையும் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News