ஓசூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்றாய சாமி கோவில் கும்பாபிஷேக விழா
- தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அடவ னப்பள்ளி கிராமத்தில், சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாய சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும், புதிதாக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்தும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.
பின்னர், புனித நீர் கொண்ட குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுரத்தின் மீது இருந்த கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், சாமிக்கு மகா தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, பிரபாகர் ரெட்டி, பாகலூர் ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.