உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 500 பெட்ஷீட்டுகள்-ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-09-27 09:46 GMT   |   Update On 2023-09-27 09:46 GMT
  • ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.
  • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ராஜா எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து 500 பெட்ஷீட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்சேகர் தலைமை தாங்கினார். மருத்துவர் மாரிராஜ், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து அரசு மருத்துவ மனைக்கு 500 பெட் சீட்டுகளை வழங்கினார். மேலும் மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய ராஜா எம்.எல்.ஏ, தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு நோயாளிகளுக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகளும் செய்யப்படும் வகையில் பல்வேறு தேவை கள் நிறை வேற்றப் பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு மருத்து வர்கள், செவிலி யர்கள், மருத்துவமனை பணி யாளர்கள் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை குணப்படுத்தி அவர்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். நிகழ்ச்சி யில் நகர துணை செய லாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வீரமணி, ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News