உள்ளூர் செய்திகள்

லாரியில் கடத்திவந்த 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

பண்ருட்டியில் அதிரடி லாரியில் கடத்தி வந்த 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-11-16 08:21 GMT   |   Update On 2022-11-16 08:21 GMT
  • பால் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.

கடலூர்: 

கடலூர் குடிமை பொருள் வழங்க ல்குற்றப்புலனாய்வுத்துறை போலீசார்ப ண்ருட்டி,புதுப்பேட்டை சிறுகிராமத்தில்இ ன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுஅந்தவழியாக வந்த பால் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில்மூட்டை, மூட்டையாக ரேசன்அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லாரி ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்திருவண்ணாமலை மாவட்டம்நாச்சியார் பேட்டை மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சரவணன் (34) என்பது தெரியவந்தது. அவர்திருவண்ணாமலையி ல்கள்ளச்ச ந்தையில்விற்பனைசெய்ய 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்துசரவணனை போலீசார் கைது செய்து 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் பால் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News