உள்ளூர் செய்திகள்

ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு தருமபுரியில் காலை 8 மணிக்குள் 5 டன் பூக்கள் விற்பனை

Published On 2022-12-31 10:19 GMT   |   Update On 2022-12-31 10:19 GMT
  • 2345 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி ப்பூக்களை சாகுபடி செய்துள்ளனர்.
  • இன்று காலை 8 மணிக்குள் 5 டன் சாமந்திப் பூக்கள் விற்று தீர்ந்தது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி, பஞ்சப்பள்ளி, தொப்பூர், சாமிசெட்டிபட்டி, ஜருகு உள்ளிட்ட பகுதிகளி 2345 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி ப்பூக்களை சாகுபடி செய்துள்ளனர்.

இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டி ற்கு சாமந்தி பூக்கள் குவிய தொடங்கிய தால் கடந்த இரண்டு வாரங்களாக சாமந்தி ப்பூக்களுக்கு விலை குறைந்து கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை யானது.

விவசாயி களுக்கு பூக்கள் பறிக்கும் கூலியே கிடைக்க வில்லை என பூக்களை விவசாயிகள் சாலை ஓரங்களிலும் ஆறுகளிலும் கொட்டி வந்தனர்.

இந்த நிலையில் மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விலை போனது. இதனை தொடர்ந்து மீண்டும் சாமந்தி பூக்களின் விலை சரிந்து கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நாளை ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி அதிகப்படியான விவசாயிகள் பூ மார்க்கெட்டில் சாமந்தி பூக்களை குவித்தனர். வியாபாரிகளும் பொதுமக்களும் காலை முதலே பூ மார்க்கெட்டில் குவிந்ததால் சாமந்திப்பூ கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை 8 மணிக்குள் 5 டன் சாமந்திப் பூக்கள் விற்று தீர்ந்தது. இதனால் பூக்களை கொண்டு வந்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் சம்பங்கி கிலோ 80 ரூபாயும், பன்னீர் ரோஸ் கிலோ 160 ரூபாய், செண்டுமல்லி கிலோ 60 ரூபாய், பட்டன் ரோஸ் 200 ரூபாய், மற்றும் பூ மார்க்கெட்டுக்கு புதிய வரவாக உள்ள ஆஸ்ரால் மலர் 150 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News