மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 5 பவுன் செயின் பறிப்பு
- மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
- செல்போன் சார்ஜ் போடுவது போல் நோட்டம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மாரண்ட அள்ளி ரோட்டில் கோவில் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அருள்மொழி மனைவி செல்வி (வயது 45) கடந்த 9ந்தேதி அன்று மதியம் வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொடுக்க சொல்லி கேட்டுள்ளார். செல்வி அந்த நபருக்கு சார்ஜ் போட்டு கொடுத்துவிட்டு வேலை சம்பந்தமாக வெளி யே சென்று விட்டார். அப்போது செல்வியின் தாய் சரோஜா (வயது 70) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து குளிர்பா னத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயக்கம் அடைந்த பிறகு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.
இதனை யடுத்து வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த செல்வி தாய் சரோஜா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கழுத்தில் இருந்த செயின் மாயமாகியிருந்தது. அவரை மீட்டு தரும்புரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தார். இது குறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.