உள்ளூர் செய்திகள்

விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

வடமதுரை அருகே கார்-சரக்கு வேன் மோதியதில் 5 பேர் படுகாயம்

Published On 2022-07-22 07:03 GMT   |   Update On 2022-07-22 07:03 GMT
  • சரக்கு வாகனம் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்
  • இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

திருச்சியை சேர்ந்தவர் விஜயகாந்த்(40). ஆயில்மில் வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று டிரைவர் ராஜேந்திரன்(50) என்பவருடன் காரில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சி-திண்டுக்கல் 4 வழிச்சாலை தனியார் மில் அருகே கார் வந்தபோது குறுக்கே வடமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் வந்த விஜயகாந்த், ராஜேந்திரன், சரக்கு வாகனத்தில் வந்த வடமாநில தொழிலாளர்களான குபேந்திரகுமார்(40), பீமாகுமார்(26), நரேந்திரன்(32) ஆகியோர் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த தினேஷ்குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News