கோப்பு படம்.
தேனி அருகே குழந்தைகள் உள்பட 5 பேர் மாயம்
தேனி:
தேனி அருகே ஆண்டி பட்டி ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ராஜதுரை (வயது26). இவர் மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். ஊர் திரும்பிய ராஜதுரை கடமலைக்குண்டு பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் சங்கர மூர்த்திபட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (50). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று மாத்திரை வாங்க சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புலட்சு மியை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி அசந்தா (33). இவர்களுக்கு சத்திய வர்ஷினி என்ற மகளும் கிஷோர்பாலா, கிரிதர்பாலா ஆகிய 2 மகன்களும் உள்ள னர். சம்பவத்தன்று பால முருகன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கிரிதர் பாலா மட்டும் வீட்டில் இருந்து ள்ளார். அசந்தா மற்றும் 2 குழந்தைகள் மாயமாகி இருந்தனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.