உள்ளூர் செய்திகள்

450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2023-05-19 09:29 GMT   |   Update On 2023-05-19 09:29 GMT
  • 9 மூட்டை அரிசி என மொத்தம் 450 கிலோ பறிமுதல் செய்தனர்.
  • ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.

தருமபுரி,

ரேசன் அரிசியை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோரை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணு கோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தருமபுரி பாபா சாகிப் தெருவில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் சேகர் (47) என்பவரது வீட்டில் இட்லி கடைகளுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டி ருந்த ரேஷன் அரிசியை தலா 50 கிலோ எடைகொண்ட 9 மூட்டை அரிசி என மொத்தம் 450 கிலோ பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.

Tags:    

Similar News