உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 44 பேர் பாதிப்பு

Published On 2022-08-28 08:24 GMT   |   Update On 2022-08-28 08:24 GMT
  • 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
  • இந்த நிலையில், நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 25-ந் தேதி 39 பேரும், நேற்று முன்தினம் 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 15 பேர், வீரபாண்டி, காடை யாம்பட்டியில் தலா 5 பேர், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி பகுதியில் தலா 3 பேர், எடப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியில் தலா 2 பேர், ஆத்தூர், கொங்கணாபுரம், நங்கவள்ளி, சங்ககிரி பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News