உள்ளூர் செய்திகள்

பாளையில் பெண்ணிடம் நகை பறித்த 4 மாணவர்கள் கைது

Published On 2022-08-05 09:43 GMT   |   Update On 2022-08-05 09:43 GMT
  • பாளையில் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
  • கைதான சிறுவர்களில் 3 பேர் பள்ளியிலும், ஒருவர் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 சிறுவர்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் பாளையில் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பாளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நகை பறித்த சிறுவர்கள்

அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர்களில் 4 பேர் கடந்த 2-ந் தேதி பாளை தெற்கு பஜாரை சேர்ந்த காந்தியம்மாள் என்பவரிடம் 14 கிராம் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 3 பேரை விடுவித்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். கைதான சிறுவர்களில் 3 பேர் பள்ளியிலும், ஒருவர் கல்லூரியிலும் படித்து வருவது தெரியவந்தது. இதனால் அவர்களை நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags:    

Similar News