உள்ளூர் செய்திகள்
- கோழி சண்டை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர்.
கடலூர்:
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று இரவு சோர்ந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ரோந்து பணி நடந்தது. அப்போது பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர். அங்கு சென்றபோது கோழி சண்டை நடத்தி சூதாட்டம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோழிச்சண்டை சூதாட்டம் நடத்திய கருப்பன்சாவடி விஜய், தா. பாளையம் பாஸ்கர், பேய்க்கா நத்தம் மனோ மூர்த்தி, வெங்கடாம்பேட்டை சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.