உள்ளூர் செய்திகள்

மாநில நீச்சல் ேபாட்டிக்கு 30 மாணவிகள் தகுதி

Published On 2022-11-11 10:20 GMT   |   Update On 2022-11-11 10:20 GMT
  • சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
  • இதில் 75 மாணவிகள் இலக்கை நோக்கி நீச்சல் அடித்து திறமையை வெளிப்படுத்தினர்.

சேலம்:

தமிழக பள்ளிக்கல்வித்–துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 14, 17,19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு 100 மீட்டர், 400 மீட்டர் உள்பட 10 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் 75 மாணவிகள் இலக்கை நோக்கி நீச்சல் அடித்து திறமையை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு வயதுக்குட்–பட்ட பிரிவுகளில் இருந்து முதல் 3 இடங்களை பிடித்த 30 பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News