கோப்பு படம்.
தேனி அருகே கல்லூரி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயம்
- வெவ்வேறு 3 பெண்கள் மாயமானதையொட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் நித்ய ஸ்ரீ(21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை. படித்தது போதும் என கூறியுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த நித்யஸ்ரீ திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
தேனி சிவராம்நகரை சேர்ந்தவர் வேல்பாண்டி மகள் ஷீலாதேவி(21). இவர் பி.பி.ஏ, படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடை க்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஷீலா தேவியை தேடி வருகின்றனர்.
கம்பம் சுருளிபட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகள் கனகவள்ளி(24). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.