உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

வடமதுரை அருகே மணல் திருடிய லாரிகள், ஜே.சி.பி. பறிமுதல்

Published On 2022-06-24 10:38 IST   |   Update On 2022-06-24 10:38:00 IST
  • வடமதுரை அருகே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்யப்பட்டது

வடமதுரை:

வடமதுரை, அய்யலூர், குஜிலியம்பாறை, பாளையம், எரியோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கிராமங்களில் உள்ள தென்னந்ேதாப்புகளில் மணல் பதுக்கி வெளி மாவட்டங்களுக்கு கடத்த–ப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தநிலையில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மண்டல புவியியல் அதிகாரி மாரியம்மாளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முத்தண்ணாங் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இது குறித்து கம்பிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் கார்த்திக், நந்தவனப்பட்டி பகுதியை சேர்ந்த மயி–ல்வாகனம், காமலாம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரம் வெங்கடேஷ் , சுப்பிரமணி, தமிழ்அன்பு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடமதுரை இன்ஸ்பெக்டர் நாகசாந்தி ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News