உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே 3 பேர் தற்கொலை

Published On 2022-09-26 04:52 GMT   |   Update On 2022-09-26 04:52 GMT
  • குடும்ப பிரச்சினையில் 3 பேர் தற்கொலை
  • இது குறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் செல்வக்குமார் (வயது29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வக்குமார் விஷ மருந்தை குடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் அருண்குமார் (30). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து அருண்குமார் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் இருந்தார். அவரை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி மனைவி மாரியம்மாள் (50). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த மாரியம்மாள் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார்.

பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்ைச பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News