உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2023-03-09 08:46 GMT   |   Update On 2023-03-09 08:46 GMT
  • குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது36) என்பவர் எஸ்.வி.பாளையம் சுடுகாடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
  • இதேபோல் சாராயம் விற்பனை செய்த செல்வம்(42), பூபதி (52) ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல்செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராயப்பன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது36) என்பவர் எஸ்.வி.பாளையம் சுடுகாடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்பனை செய்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(42), புதுப்பா லப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி (52) ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News