உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 3 பேரிடம் நூதன முறையில் பணம் மோசடி

Published On 2023-03-19 15:20 IST   |   Update On 2023-03-19 15:20:00 IST
  • இதை நம்பி20 லட்சத்து 85 ஆயிரத்து 618 ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் துருவாத நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது49). இவருக்கு வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வருகிறது. மேலும் இந்த பகுதி நேர வேலையில் குறைந்த முதலீட்டு அதிக லாக் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ராம்குமார் ரூ.20 லட்சத்து 35 ஆயிரம் அவரது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

இதேபோல் ஓசூர் ஆட்கோ பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கும் வாட்ஸ் அப்பில் ஹோட்டல்களுக்கான கூகுள் ஆப் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக மெசேஜ் வந்தது.

மேலும் இதை நம்பி20 லட்சத்து 85 ஆயிரத்து 618 ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் தான் தான் ஏமாற்றம் அடைந்தது ெதரியவந்தது.

மேலும் மூக்கண்ணப்பள்ளி சேர்ந்தவர் மகாலட்சுமி (31), இவருக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக எஸ்எம்எஸ் வந்தது. இந்த வேலையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய், பகுதி நேரம் என்றால் 5000 ரூபாய் என்று கூறி ஆசை வார்த்தை உள்ளார்.

இதை நம்பி இவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 8 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக்கு அனுப்பியுள்ளார். இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரி சைபர் கிராம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News