உள்ளூர் செய்திகள்

சிறுமி உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-05-19 09:28 GMT   |   Update On 2023-05-19 09:28 GMT
  • கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
  • வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி மாரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மதுமிதா (வயது16). இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாறன். இவரது மகன் சேட்டு என்கிற வெங்கடேஷ் (வயது27). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்தது.

இதனால் சேட்டுவுக்கு அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோன்று தேன்கனிக்கோட்டை ஜெரகலட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூடப்பா (71). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருப்பதால், குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுைடந்த காணப்பட்ட சூடப்பா நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Tags:    

Similar News