உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய பஸ்கள்: பெண் பயணி உள்பட 3 பேர் காயம்

Published On 2022-10-21 08:34 GMT   |   Update On 2022-10-21 08:39 GMT
  • டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது.
  • பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார்.

கடலூர்:

பண்ருட்டி, காடாம்புலியூரிலிருந்து அரசு பஸ்ஒன்றுபண்ருட்டி நோக்கி வந்தது.பண்ருட்டி அருகேபணிக்கன்குப்பம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்து கொண்டிரு ந்தபோதுதிடீரென்று முன்பக்க டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவர் உள்பட 2 பேர் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதே போல விருத்தாச்சலத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் தனியார் பஸ் ஒன்று அரசு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் குறிஞ்சிப்பாடிகண்ணாடி சேர்ந்த கிருஷ்ணமூர்த்திஎன்பவர் பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார். அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

Tags:    

Similar News