உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2023-05-26 08:02 GMT   |   Update On 2023-05-26 08:02 GMT
  • தேனி அருகே வெவ்வேறு பிரச்சினையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே தேவா ரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் மகன் அய்யனார் (வயது21). இவர் சிந்தலைச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்ல பைக் வேண்டும் என பெற்றோ ரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் பொருளாதார வசதி இல்லை. படித்து முடித்தவுடன் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதனால் மனவேதனை யடைந்த அய்யனார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது57). இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அப்போது முதல் மன உளைச்சலில் இருந்த தங்கத்துரை விஷம் அருந்தி மயங்கினார். கடமலை க்குண்டு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கத்துரை உயிரிழந்தார். இது குறித்து கடமலை க்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயமங்கலத்தை சேர்ந்த வர் சின்னச்சாமி (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சின்னசாமி சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News