உள்ளூர் செய்திகள்

கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 3 பேர் கைது

Published On 2022-09-07 08:37 GMT   |   Update On 2022-09-07 08:37 GMT
  • கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 17- ந்தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளியை இடித்து சேதப்படுத்தியதாக நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 20), சதீஷ் பாபு (20) மற்றும் போலீசார் மீது கல்வீசி தாக்கிய சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News