உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

Published On 2023-09-20 15:39 IST   |   Update On 2023-09-20 15:39:00 IST
  • ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்
  • ஆபாச வார்த்தைகள் பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்,

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் தருமபுரியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடத்தூரில் உள்ள பேக்கரிக்கு சதீஷ்குமார் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்கிற வல்லரசு (25), வேலு (33), கவியரசு (31) ஆனந்த் (31) ஆகிய 4 பேரும் சேர்ந்து வழிமறித்து ஆபாச வார்த்தைகள் பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்,

இதில் காயமடைந்த சதீஷ்குமார் கடத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தருமபுரி அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் விஜி , வேலு, ஆனந்த் ஆகிய 3 பேரையும் கடத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறை வாகியுள்ள கவியரசனை தேடி வருகின்றனர். 

Similar News