உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்பு

Published On 2023-11-11 14:05 IST   |   Update On 2023-11-11 14:05:00 IST
  • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.
  • நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.

இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டி யன், கடற்கரை, பூசைப் பாண்டியன், சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன் மதிமாரி முத்து,

நகரசெயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர் குருசாமி, ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், வருவாய் துறையினர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கரன்கோ வில் தாசில்தார் பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News