உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் 24-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.
- தங்கள் குறைகள்,கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள்,கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.