திருப்பூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம்- வருகிற 7-ந்தேதி நடக்கிறது
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம் வரும் 7ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பூர் வேளாண் இணை இயக்குனர் மகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில், 2021 - 22ம் நிதியாண்டில், 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக மாற்றும் நோக்கில் வேளாண் சார்ந்த அனைத்து துறைகள் இணைந்து, வருகிற 7-ந் தேதி, 50 ஊராட்சிகளில் தொடர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
அவிநாசியில் ஆலத்தூர், சேவூர், நம்பியாம்பாளையம், பழங்கரை, பாப்பான்குளம், புதுப்பாளையம், செம்பியநல்லுார். தாராபுரத்தில் பொன்னாபுரம், முண்டுவேலம்பட்டி, தொப்பம்பட்டி. குடிமங்கலத்தில், அணிக்கடவு, குடிமங்கலம், வாகைத்தொழுவு.
காங்கயத்தில், நத்தக்காடையூர், பழையகோட்டை, பாப்பினி, பரஞ்சேர் வழி, பொதியம்பாளையம் ஊராட்சி.குண்டடத்தில், எல்லம்பாளையம் புதூர், நந்தவனம்பாளையம், பெருமாள்பாளையம், சடையபாளையம், சங்கரன்டாம்பாளையம், சூரியநல்லுார், வட சின்னேரி பாளையம்.
மடத்துக்குளத்தில், துங்காவி. மூலனூரில் கிழான்குண்டல், கொமாரபாளையம், பொன்னிவாடி. பல்லடத்தில், கணபதிபாளையம், கரைப்புதூர், வடுகபாளையம்புதூர். பொங்கலூரில் கண்டியன்கோவில், தெ.அவிநாசி பாளையம், தொங்குட்டிபாளையம், உகாயனூர்.திருப்பூரில், முதலிபாளையம், வள்ளிபுரம்.
உடுமலையில் ஆண்டிய கவுண்டனூர்,ஜல்லிப்பட்டி, கல்லாபுரம், ஊத்துக்குளியில் செங்கப்பள்ளி, சின்னேகவுண்டன் வலசு, கமலக்குட்டை, கவுண்டம்பாளையம், நடுப்பட்டி, சுண்டக்காம்பாளையம், விருமாண்டம்பாளையம். வெள்ளகோவிலில் பச்சாபாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகளில் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், பட்டா மாறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறப்படும். பயிர்க்கடன் வழங்கல், பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு, விவசாய கடன் பெற விண்ணப்பம் பெறப்படும். விவசாயிகள், முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.