உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Published On 2022-06-04 06:05 GMT   |   Update On 2022-06-04 06:05 GMT
திருப்பத்தூரில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 

இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் வரவேற்றார். 

விழாவில் திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாரணி நாராயணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் நேரு, அபுதாஹிர், சரண்யா ஹரி, சமீம் நவாஸ், பிளாசா ராஜேஸ்வரி சேகர், கோமதி சண்முகம், ரெமி சுலைமான் பாதுஷா, சாந்தி சோமசுந்தரம், பாண்டியன் மற்றும் யூனியன் கவுன்சிலர் சகாதேவன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.பி.எம்.பிச்சை, மீரா, பேச்சாளர் ஷாஜகான்,  தம்பி பட்டி வைரமணி மற்றும் பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News