உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

களக்காடு அருகே மாமியாரை தாக்கிய மருமகனுக்கு வலைவீச்சு

Published On 2022-05-31 10:14 GMT   |   Update On 2022-05-31 10:14 GMT
களக்காடு குடில்தெருவில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு குடில்தெருவை சேர்ந்தவர் மதனகோபால் மனைவி பரமேஸ்வரி (வயது 53). இவரது மகள் சத்தியாவிற்கும், அதே ஊரை  சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 3 ½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜ்குமாருக்கும், அவரது மனைவி சத்தியாவிற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் சத்தியாவை தாக்கினார். இதனைதொடர்ந்து சத்தியா அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
 
சம்பவத்தன்று   ராஜ்குமார் தனது மாமியார் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து அவரை அவதூறாக பேசினார். இதனை அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பரமேஸ்வரியை கற்களை வீசி தாக்கினார்.

இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News